பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-8 முதல் 12 வரை.pdf/538

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

522

பன்னிரு திருமுறை வரலாறு


வேற்ற வேண்டித் தாம் ஒருபுறஞ் சென்று நின்று இறை வனை வேண்ட அவனது திருவருளால் இவ்வினியசுவை யினதாகிய மாங்கனி தம் கையகத்தே வந்தமர்ந்த வியப் புடை நிகழ்ச்சியும் ஆகிய செய்தியைத் தம் கணவனுக்கு எடுத்துரைத்தார். அது கேட்ட பரமதத்தன், புனிதவதி யார் குறித்த திருவருள் நிகழ்ச்சியைத் தெரிந்து தெளிதற் குரிய ஆற்றலில்லாதவனுகி அவரை நோக்கி இந்தக் கனி சிவபெருமானுடைய திருவருளிளுலே உனக்குத் கிடைத்த தாயின் இதுபோன்று இன் னும் ஒரு கனியை அவனருளால் அழைத்து அளிப்பாயாக எனக்கூறினன். புனிதவதியார் அவ்விடத்தை கிட்டுத் தனியிடத்திற் சென்று நின்று சிவ பெருமானையிறைஞ்சி இன்னம் ஒரு பழத்தை இப்பொழுது தந்தருள தொழியின் ஈசனருள் என்னும் உண்மை மறுக் கப்பட்டு அடியேனுடைய வார்த்தை பொய்யாய்விடும் என விண்ணப்பஞ் செய்தார். அடியார்க்கெளிய பெருமா ளுகிய இறைவனது திருவருளால் அவர் கையகத்தே மற்ருெரு மாங்கனியும் வந்திருந்தது. அதனைக் கணவன் கையிற் கொடுக்க, அவனும் வியப்புற்று வாங்கினன். அக் கனி சிறிது நேரத்திற்குள் அ :ன் கையினின்று மறைந்து விட்டது. அதுகண்டு அஞ்சிய பரமதத் தன் மனத்தடு மாற்ற மெய்தித் தன் மனே வியாரை வேருெரு தெய்வ மென்றே கருதி ன்ை. அவரைப் பிரிந்து வாழவேண்டு மென் னுந் துணிபுடையனுன்ை. தன் கருத்தினைப் பிற ரெவர்க்கும் வெளிப்படுத்தாமல் மனைவியென்னும் உறவுத் தொடர்பின்றியொழுகினன்.

இக் கருத்துடைய பரமதத்தன் கடல்கடந்து வாணி கஞ் செய்து வருவேன் எனச் சுற்றத்தார்க்குச் சொல்லி, அவர்கள் அமைத்துத்தந்த மாக்கலத்தில் வெளிநாட்டார் விரும்பி வாங்கும் அரிய பண்டங்களை நிரம்ப ஏற்றிக் கொண்டு கடல்கடந்து வெளிநாடு சென்ருன். சில நாள் அங்கிருந்து பெரும்பொருளிட்டிய பின்பு மீண்டும் அம்மரக் கலத்திலேறிப் பாண்டி நாட்டிலுள்ள துறைமுகப்பட்டின மொன்றை அடைந்தான் இரண்டாம் முறை யாக மணந்து கொண்ட அம்மனைவி வயிற்றில் ஒரு பெண் குழந்தை பிறந்தது. அம்மகவுக்குத் தான் தெய்வமெனக் கருதி விலகிய முதல் மனைவியாரது பெயராகிய புனிதவதியார் என்ற பெயரையே இட்டு வளர்த்து வந்தான்.