பக்கம்:பரகாலன் பைந்தமிழ்.pdf/160

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

; 露む பரகாலன் பைந்தமிழ்

திற்கும் எம்பெருமானை அடையாளம் கண்டுகொள்ள முடியவில்லை. அறிந்துகொள்ளாமல் இருக்கவும் மனம் இரவில்லை. சொந்த அறிவு அவளது ஆராய்ச்சிக்குத் செய்யவில்லை. அவர் திருமுகத்தை நேரே பேசமுடியாதபடி சோதி வெள்ளம் அலை ந்து தள்ளுகின்றது. அதனால் முகம் நோக்கி வாய் எழும். முடியாத நில்ை ஏற்பட்டுவிடுகின்றது அவளுக்கு.

வர் நம் தலைவராகவே இருத்தல் கூடும் என்று இநஞ்சிலே ஒர் எண்ணமும் தோன்றினமையால் வினவ டியாத நாணமும் இவளை ஆட்கொண்டு விடுகின்றது. இன்னாரெனத் தெரிந்துகொள்ள வேண்டும் என்ற அவாலோ அதிகரித்துவிடுகின்றது, இந்நிலையில் அருகி விருக்கும் வேறொருவரை நோக்கி இப்பெரியார் யார்?' என்று வினவுகின்றான். அதற்கு எம்பெருமானே நான் அட். புயகரத்தேன்' என்று மறுமொழி கூறுகின்றான்.

துணை

எம்பெருமானோ வினாடிக்கு வி னா டி தன. திரு ாலத்தை மாற்றி மாற்றிக் காட்சி அருள்கின்றான்.

அதனால் இவளுடைய வினாவும் மாறிமாறித் தொடுக்கப் பெறுகின்றது. எல்லா வினாகட்கும் எம்பெருமானே, "நான் அட்டபுயகரத்தேன்' என்றே விடை தருகின்றான்.

படுக்கையறையில் இங்ங்ணம் பேச்சுகள் நடந்து கொண்டிருப்பது தாய்மார், தோழிமார் செவியில் படுகின்றது. உடனே அவர்கள் பரகால நாயகியின் பள்ளி பறைக்கு விரைந்து வந்து 'நங்காய் ஏதாவது மண்மயக்கம் ஏற்பட்டதா? இவை என்ன பேச்சுகள்?’ என்று வினவு கின்றனர். 'ஒன்றும் மனமயக்கம் இல்லை. ஒரு பேரருளாளரைச் சேவிக்கப் பெற்றேன்; இவர் யார்? என்று வினவினேன். அட்டயுகரத்து எம்மான், நான் தான் அட்டபுயகரத்தேன்’ என்று மறுமொழி தருகின்றான் இதனை நீங்களே காணுங்கள்' என்று கூறுகின்றாள் ஆழ்வார் நாயகி. இங்கனம் பரகால நாயகி தன் தோழிமார்க்கும் அன்னைமார்க்கும் நடந்த வரலாறு