பக்கம்:பரகாலன் பைந்தமிழ்.pdf/558

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

59& பரகாலன் பைந்தமிழ்

வியாபித்துள்ளான். அன்றியும், உடலினுள் உயிர் இருப் பதற்கும், உடல் உயிர் ஆகிய இரண்டினுள் இறைவன் இருப்பதற்கும் மற்றொரு வேறுபாடும் உண்டு. உயிர் உடலினுள் இருக்கும்போது அவ்வுடலுக்குரிய வளர்ச்சி. தேய்வுகள் (விகாரங்கள்) உயிருக்கு உண்டாவதில்லை. ஆனால் அவ்வுடலைப்பற்றிய இன்பத்துன்ப உணர்ச்சி கள், அறிவின் சுருக்கம், பெருக்கம் ஆகியவை உயிருக்கு உண்டு. உடலின்மீது தண்ணிய காற்று வீசுங்கால் இன் புறுதலும், தீ சுடுங்கால் துன்புறுதலும் உடலினுள் இருக் கும் உயிருக்கு நேரிடுகின்றன. இனி, குழந்தைப் பருவத் தில் அதனுள் இருக்கும் உயிரின் அறிவு சுருங்கிய நிலை யிலிருந்து பின்பு வளர்ச்சியுறுதலைக் காண்கிறோம். மற் றும், மக்கள் உடம்பினுள் உள்ள உயிர் ஐம்பொறி அறி வும் உடையதாக உள்ளது. அவ்வுயிரே, மரம் எறும்பு முதலிய உடல்களில் புகுந்தால் ஐம்பொறியறிவுமின்றிச் சில குறையவும் பெறுகின்றன. இனி, உயிர் பரு உடலைப் பெறாத நிலையில் அறிவு சுருங்கியிருத்தலும், அறிவு விரிந்திருத்தலும் உண்டு. இங்ங்னமாக உடலைப்பற்றி நிற்கும் உயிர் அவ்வுடலுக்கேற்ப இன்பதுன்ப உணர்ச்சி களும் அறிவின் சுருக்கமும் பெருக்கமும் அடைதல் தெளி வாகும். ஆனால் உடழ் உயிர் இவ்விரண்டிலுள்ளும் கலந்து நிற்கும் இறைவனை இவ்வேறுபாடுகள் சிறிதும் அடைவதில்லை. உ ய ர் தி ைண அஃறினையாகிய எல்லாப் பொருள்ளும் இறைவன் கலந்து நின்று அவற் றின் அவத்தைகள் தன்னைத் தொடராதபடி இருக்கின் றான். உடலிலுள்ள உயிர் அவ்வுடலுக்குரிய வளர்ச்சி தேய்வு நரைதிரை முதலிய விகாரங்களை அடைவதில்லை என்பதனை நாம் உணர்வோமாயின், அவ்வுடல் உயிர் இரண்டின் விகாரங்களும் இறைவனை அடைவதில்லை என்பதனையும் உணரலாம் என்பது இராமாதுசர் அரு ளிய விளக்கம் ஆகும்.