பக்கம்:பரிசு, வெள்ளியங்காட்டான்.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

12

12

சேற்றுக்கஞ் சிச்சார்ந் தொன்றிச் செழிப்பான வேலி யில்மேய்ந் தீற்றுக்கோ ரிரண்டு குட்டி யீன்றிடும் வெள்ளா டென்னக் கூற்றுக்கா ளாகும் முன்நான் கூடியும் முடனே வாழ்ந்து மாற்றுக்கு மக்கள் செல்வம் மகிழ்ந்திடப் பெறவந் துள்ளேன்.

கல்லொடு மண்மே டிட்டுக் காத்திடும் கரைகூ றிற்றாம் :
'மெல்லச்செல் லாறே ! சற்று மெல்லச்செல்' லென்று. மேலும் புல்லிச்செல் லும்போ தாறு பொசுக்கெனப் பொருதி டித்துக் கெல்லிச்சென் றதுவாம் மேட்டைக் கெக்கலி கொட்டிக் கொண்டே !

மருவாயும் வண்டா வீர்நீர்! மனங்கமழ் மலரா வேன்யான்! உருவாயும் உயிரா யும் நாம் உளமொரு மித்து வாழ்ந்தால், கருவாயும் மகவா யும்கண் களித்திடப் பெறலாம் பிள்ளை! திருவாயும் மலர்ந்து தீரத் தெளிவித்து விட்டீர் நீரே
காலையில் கடுகிச் சென்று கவின்மிக நதிநீ ராடி
மாலையும் கையு மாய் நான் மணமக ளாய்வந் துள்ளேன் ; சோலையில் குயிலே வேதச் சூத்திர மோதும்! நீரிந் நூலையென் கழுத்தில் கட்டின் நுமக்குநான் மனைவி யானேன்.