பக்கம்:பரிசு, வெள்ளியங்காட்டான்.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

20

அகத்திலே அன்பில் லான்கா
சாசையின் வயத்த னய்த்தன்
முகத்திலே முறுவல் மூசா
முழுமுட்டாள் தனம்மு திர்ந்திவ்
விகத்திலே வுண்டு றங்கி
இரண்டுமூன் றின்று தீர்த்திச்
சகத்திலே சாந்தி யற்றுச்
சாவானும் சாற்று கின்றன்:

‘நிலமுண்டாம்; வாழை, தென்னை
நெல்விளை வுண்டாம்; நீண்ட
குலமுண்டாம்; குறைகள் தீர்க்கக்
கோவிந்தன் கோவி லுண்டாம்;
நலமுண்டாம்; நலிவுண் டாயின்
நலமான மருந்து முண்டாம்;
பலமுண்டாம்; பாவம் பற்றின்,
பசனையு முண்டாம் பண்ண!

பெண்ணென ஆணெ னத்தான்
பிறந்தவர், பேறு பேணற்
கெண்ணுவ தெண்ணி யேமுற்
றியற்றுவ தியற்றி யெங்கும்
கண்ணிய ராக்கக் கல்வி
கைகொடுத் துதவுங் கா‘லெம்
புண்ணிய பூமி’ யென்றே
புலவர்கள் புகழ்வ ரன்ற?

காற்றுண்டு, வெயிலு முண்டு;
காலத்தில் பெயலு முண்டு;
‘கூற்றுண்டு தா’னென் றலும்,
‘குணமுண்டி’ங் கெனவே கூறி
நோற்றுண்டு, பசிநோய் நூக்கி
நுழையாது, நோலார் நோக
ஏற்றுண்டு திரியா துாக்கி
யிருந்தின்ப முறுமா றுண்டே!