பக்கம்:பரிசு, வெள்ளியங்காட்டான்.pdf/5

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

கவிஞரும் கலைமணியும்


முதுபெரும் கவிஞர் வெள்ளியங்காட்டான் அவர்கள் என் மதிப்புக்கும் அன்புக்கும் உரியவர்; நல்ல சிந்தனையாளர்; பகுத்தறிவாளர்; அழகுத் தமிழில் இனிமை தவழ்ந்திடக் கவிதை தரும் கவிஞர். நாங்கள் 1964 ல் கோவை தமிழ் எழுத்தாளர் மன்றம் என்ற இலக்கிய அமைப்பை நிறுவி நடத்தி வந்தோம். அப்போது இளைய தலைமுறையின் எண்ணங்களை வெளியிடும் வண்ணம் சுமார் 50 கவிஞர்களின் கவிதைகளைத் தொகுத்து வெளியிட்டோம். பல பிரபல கவிஞர்களின் கவிதைகளையும் அதில் சேர்த்தோம். “எழுக ! கவிஞ !” என்ற அந்தக் கவிதைத் தொகுப்பில் சிறப்பிடம் பெற்றது கவிஞர் வெள்ளியங்காட்டான் அவர்களின் “துணிவு” என்ற கவிதை.


கருத்தாழம் மிக்க அந்த எழுச்சிக்கவிதை இவ்வாறு பேசிற்று :

வாழ்வும் சாவும் உண்மைகள்; பிஞ்சு கனியாகிறது; கனி உதிர்கிறது! இதை நான் நன்கு உணர்ந்து கொண்டேன். எனவே எனக்கு இனி வாழ்க்கையில் அச்சமில்லை; ஆம்; என் எண்ணங்கள் உயர்ந்தவை. நான் ஒரு சிறு செடியில் இளைப்பாறி அற்ப மகிழ்ச்சி எய்த மாட்டேன். உதிக்கும் சூரியன் என்னைச் சுட்டெரித்தாலும் சரி - எனக்கு வேண்டியது கற்பகத்தருவின் நிழல் - அதை நான் அடைந்தே தீருவேன்!”


“இதோ! கடல்: நான் ஆழ் கடலில் மூழ்கி முத்தெடுக்கத் துணிந்து விட்டேன். ஆழமான இக்கடலில் குதிக்கத் துணிந்துவிட்டேன். கரையில் நின்று கொண்டு, ‘நீ இறந்து விடுவாய்!’ எனக் கதறும் கோழைகளைப் பற்றி எனக்குக் கவலையில்லை!”


“என்னிடம் உள்ளது காண்டீபம்! அது வேருென்றுமல்ல எனது கவிதை வரையப்பட்ட ஏடுதான் ! இந்த வில்லிலிருந்து