பக்கம்:பரிசு, வெள்ளியங்காட்டான்.pdf/6

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

ii

புறப்படும் சொற்கனைகள் மூடர் மனத்திலே உ மூர்க்கப் புலிகளைச் சங்கரிக்கும் ! இப்படியெல்லாம் சொல்லி வந்தவற்றுக்கு முத்தாய்ப்பாக நான்கே வரிகளில் துணிவுமிக்க ஒரு மாவீரனாக மாறிவிடுகிறார் கவிஞர்.


“தீட்டி வீசிடும் கத்திக் கெதிர் செலின்
தீமை நேரும் என் றுள்ளம் உணரினும்
நாட்டு நன்மையைக் கோரி யழைத்திடின்
நகை முகத்துடன் தாங்கத் துணிகிறேன்!”


இந்த அருமையான கவிதையை கவிஞர் “வேமா” முதலிய நண்பர்கள் அடிக்கடி சொல்லி மகிழ்வதுண்டு. திரு. டாக்டர் சாலை இளந்திரையன் அவர்கள் இக் கவிதையை உருது மொழியாக்கம் செய்வித்து ஒரு உருது மாத இதழில் வெளியிடச் செய்தார். இவரது முதல் கவிதைத் தொகுப்பான “இனிய கவி வண்டு” ஒரு அற்புதமான கவிதைப் பூக்காடு. சமுதாய மாற்றத்தை வரவேற்கும் கவிதைகளால் மலர்ந்தது அது.


இது புதுக்கவிதையின் ஆட்சிக்காலம். இன்று அரசியலில் ஆட்சியிலுள்ளவர்கள் கூட அறிஞர்களை வணங்கி ஆசிபெறல் சாதாரண நிகழ்ச்சி. அம் முறையில் இன்றைய கவிஞர்கள் ‘கவிஞர் வெள்ளியங்காட்டான்’ போன்றவர்களைப் புரிந்து கொள்வது நல்லது. எங்கோ தனியாக ஒடிக் கொண்டிருக்கும் இனிய நீர் கொண்ட சிற்றாறு போல, கொதிக்கும் வெயிலில் குடை விரித்து விசிறும் ஒரு பசுமரம் போல கவிஞர் வெள்ளியங்காட்டான் விளங்குகிறார். இவரிடம் புல்லும் கதை சொல்லும். நெல்லும் பேசும். ஆலமரமும் அங்கு வரும் காற்றும், சித்திரை வெய்யிலும், ஐப்பசி மழையும் கூட நமக்கு அறிவுரை கூறும். குறிப்பாக மனிதாபிமானமே இந்நாலின் சாராம்சம். சத்திய ஆவேசமே இதன் தாக்கம். இதுவே ‘பரிசை’ப் பற்றிய விளக்கம்.