நாற்பது ஆண்டுகளுக்கு முந்திய வரலாற்றுச் செய்தி இது.
ஆம்! இந்தச் சிறிய புத்தகம் பற்றித்தான் கூறுகிறேன்.
புத்தகம் சிறியது தான்; இதன் தலைவர் பெரியார் அல்லவா?
இந்த நாட்டின் தலைவிதியை மாற்றி எழுதிவிட்ட காலத்தலைவன் அல்லவா பெரியார்!
அவர் கண்ட தன்மான இயக்கம் சாதித்திருக்கிற செயல் சாதாரணமானதா?
நாட்டில் எவ்வளவு பெரிய மாற்றத்தை உருவாக்கி விட்டது அவருடைய உழைப்பு.
சோர்வு படாத அவருடைய உழைப்பால் இன்று தமிழ்நாட்டு மக்கள் அடைந்திருக்கும் பயன் இத்தனை - இவ்வளவென்று யாரும் எண்ணிப் பார்க்க முடியுமா?
"வேறு யாரும் முன்வராததால், நான் என் தலைமேல் துாக்கிப் போட்டுக் கொண்டு செய்கிற செயல் இது" என்று அந்தச் செயல்வீரர் தன் வேலையைப் பற்றிச் சொல்லிக் கொண்டார்.
1945 ஆம் ஆண்டில் என்னுடைய பதினெட்டாம் வயதில் குடியரசு படித்த நான் பகுத்தறிவுக் கருத்துக்களை ஏற்றுக் கொண்டேன். நாடு விடுதலை அடைவதைவிட,