பக்கம்:பல்சுவை விருந்து.pdf/131

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புதுக்கவிதை - சமுதாய நோக்கில் 109

என் நெஞ்சுக்குள் பாய்ந்ததால் உன்னோடு சம்பாஷிக்கலாமே என்ற சந்தோஷத்தினால்தான் நின்றேன் என்று. விபசாரம் பற்றி அவன் தந்த விமர்சனம்:

"வறுமை வேரோடிப் போயிருக்கும் ஒரு தேசத்தில் இந்த மாதிரி நிகழும் விபத்துகளுக்கு விமோசனமே கிடையாது சார். எங்கள் ராத்திரிகளுக்கு வெளிச்சங்கள் வழங்க விளக்குகள் கிடைக்காத போது ஆறுதல் தருவதெல்லாம் ஆகாய நிலாவின் மெல்லிய பிரகாசங்கள் தான். நாங்க என்ன செய்வது? சபிக்கப்பெற்ற பிரஜைகள் நாங்கள். சாபங்களாய் விளைந்து விட்ட எங்களின் பாவ வறுமைக்கு எந்த அரசாங்கமும் ஒருதேவ விமோசனத்தை வழங்கவில்லையே சார்.

u.8% - 9