பக்கம்:பல்சுவை விருந்து.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வழிகாட்டும் வள்ளுவம் 15

கூறியிருப்பது ஈண்டு எண்ணற்பாலது. அறத்தையும் பொருளை யும் இன்பத்தையும் சரியாக அறிந்தவர்கட்கு வீடு தெளிவுறும்; கட்டாயம் தெளிவுறத்தான் வேண்டும்.

திருக்குறளை ஓர் உயர்ந்த மணிகள் வைக்கப்பட்டிருக்கும் பெட்டகத்திற்கு ஒப்பிடலாம். திருக்குறளாகிய பெட்டியில் நான்கு பெரிய அறைகளும் 133 சிறிய அறைகளும் இருக் கின்றன. பாயிரம் என்ற முதலாவது அறையில் கடவுள் வாழ்த்து, வான்சிறப்பு, நீத்தார் பெருமை, அறன் வலியுறுத்தல் என்ற நான்கு சிறிய அறைகளும் இருக்கின்றன. அறத்துப்பால் என்ற இரண்டாவது அறை மூன்று பகுதியாகத் தடுக்கப் பட்டிருக்கிறது. முதல் பகுதியாகிய இல்லற இயலில் இல் வாழ்க்கை முதல் புகழ் இறுதியாக இருபது சிறிய அறைகளும், இரண்டாவது பகுதியாகிய துறவறவியலில் அருளுடைமை முதல் அவா வறுத்தல் ஈறாக 13 சிறிய அறைகளும் இருக் கின்றன. நான்காவது பகுதியோ ஊழ் என்ற பகுதி, ஒரு சிறிய தனிஅறையாக உதவுகிறது. மூன்றாவது அறையாகிய பொருட் பால் என்ற அறையும் மூன்று சிறிய பகுதிகளாகப் பிரிக்கப் பட்டிருக்கிறது. முதற் பகுதியாகிய அரசியலில் இறை மர்ட்சி முதலாக இடுக்கண் அழியாமை ஈறாக 25 சிறிய அறைகளும், இரண்டாம் பகுதியாகிய அங்க இயலில் அமைச்சு முதல் மருந்து ஈறாக 32 சிறிய அறைகளும், மூன்றாவது பகுதியாகிய ஒழிபியலில் குடிமை முதல் கயமை ஈறாக 13 சிறிய அறைகளும் இருக்கின்றன. நான்காவது அறையாகிய காமத்துப்பாலும் இரண்டு பகுதியாகத் தடுக்கப்பட்டிருக்கிறது. முதற் பகுதியாகிய களவியலில் தகையணங்குறுத்தல் முதலாக அலரறிவுறுத்தல் ஈறாக ஏழு சிறிய அறைகளும், இரண்டாவது பகுதியாகிய கற்பியலில் பிரிவாற்றாமை முதல் ஊடலுவகை ஈறாகப் பதினெட்டு சிறிய அறைகளும் இருக்கின்றன.

இந்த 133 சிறிய அறைகளிலும் அறைக்குப் பத்தாக விலை மதிக்க முடியாத 1330 அழகிய குறள் மணிகள் இருக்கின்றன.