பக்கம்:பல்லவப் பேரரசர்.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

34

பல்லவப் பேரரசர்



திருநாவுக்கரசர்[1]
(கி.பி. 580–660)

இளமைப் பருவம்

தென் ஆர்க்காடு ஜில்லாவில் திருக்கோவலூர்த் தாலுகாவில் உள்ள திருஆமூர் என்னும் திருப்பதியில் புகழனார் என்ற வேளாளர் இருந்தார். அவர் மனைவியார் பெயர் மாதினியார் என்பது. இவர்கட்குத் திலகவதியார் என்ற மகளார் இருந்தார். ஆண்மகவு இல்லாமையால் பெற்றோர் சிவபெருமானைத் தவம் கிடந்தனர். பிறகு ஒர் ஆண்மகவு பிறந்தது. அவருக்கு மருள்நீக்கியார் என்று பெயரிட்டு வளர்த்தனர். திலகவதியார்க்கு உற்ற வயது வந்ததும் அவரைச் சிறந்த போர்வீரரான கலிப்பகையார் என்பவர்க்கு மணம் பேசினர். மணத்திற்கு முன் வேற்றரசன் படையெடுப்பைத் தடுக்கக் கவிப்பகையார் அரசனால் அனுப்பப்பட்டார். அவர் வருவதற்குள் புகழனாரும் மாதினியாரும் காலமாயினர். பின்னர்ப் போருக்குச் சென்ற கலிப்பகையாரும் கொல்லப்பட்டார். இதனை அறிந்த திலகவதியார் இறக்கத் துணிந்தார். அவ்வமயம் தம்பியாரான மருள்நீக்கியார் வேண்ட, சிறுவரான அவரை வளர்ப்பது தமது கடமை என்று எண்ணி இறப்பது தவிர்ந்தார் சிறந்த ஒழுக்கத்துடன் சிவ பூசையில் ஈடுபட்டு வாழ்ந்துவந்தார். மருள்நீக்கியாரும் தமிழ்ப்புலமை பெற்றுச் சிவபக்தியுடன் வாழ்ந்தார்.


  1. இவை திருநாவுக்கரசர்வரலாறு.பெரியபுராணம் அப்பர் தேவாரம் இவற்றுட் குறித்துள்ளபடியே தரப்பட்டுள்ளது.