பக்கம்:பல்வகைப் பாடல்கள்.pdf/115

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பல வகை விளையாடல்கள் 109

கூந்தல் அழகுக்கும் (வடிவேலர்) குறவேடம்

. பூண்டாரோ? சீனி மணலிலே (செந்திவேலவர்) திருவேட்டை

- - ஆடையிலே வாச்சுதடி மான்வேட்டை வள்ளிமண வாளருக்கு; வள்ளிக்கும் தேவானேக்கும் மயிர்பிடி சண்டையிலே, வள்ளிமேல் குத்தமில்லே மயிரைவிடு தேவான்; பட்டுண்டோ செட்டி, பவளமுண்டோ வியாபாரி; எல்லாச் சரக்குமுண்டு, இனிவாரக் கப்பலில்லே.

(31)

கண்ணே, உனக்குப் பொற் சங்கால் போட்டில்ை புத்தி குறையுமுன்னு வெள்ளிச்சங்கால் போட்டில்ை லித்தை குறையுமுன்னு நடுக்கடலில் மூழ்கி நாரணனுர் சங்கெடுக்கத் திருப்பாற் கடல்மூழ்கித் திருமாலின் சங்கெடுக்கப் பொருக்கென்றெழுந்து புறப்பட்டார் உங்கள்.அம்மான்.

(32)

கண்ணே, என் கண்மணியே, காதல னே, உனக்குப் பொற்சங்கால் போட்டினல் புத்தி குறையுமுன்னு வெள்ளிச்சங்கால் போட்டினல் வித்தை குறையு

- முன்னு நடுக்கடலில் மூழ்கி நாரணனர் சங்கெடுக்கத் திருப்பாற் க. ல்மூழ்கித் திருமாலின் சங்கெடுக்கப் பொருக் கென்றெழுந்து புறப்பட்டார் உங்களம் மான்.

(33)

கண்ணே அடிச்சார் ஆர்? " . . கண்மணியைத் தொட்டார்.ஆர்’