பக்கம்:பள்ளிக்குச் சென்ற சிட்டுக்குருவிகள்.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

13


 "நாங்கள் படிக்கப் போகிறோம்'என்று கத்திக் கொண்டே அரசமரத்தைச் சுற்றிச் சுற்றி வந்தன.

அந்த மரத்தில் குடியிருந்த பறவைகளுக் கெல்லாம் இது புதிய செய்தியாய் இருந்தது.

படித்தால் பெரிய நிலைக்கு வரலாம். இன்பமாக வாழலாம். அறிஞர்கள் பாராட்டு வார்கள். இப்படிப்பட்ட வாய்ப்பு அந்தச் சிட்டுக் குஞ்சுகளுக்குக் கிடைத்ததைக் கண்டு அரசமரத்துப் பறவைகளெல்லாம் வாழ்த்துக் கூறின.

அம்மாச்சிட்டு, கவுடியா மடத்தின் எதிரில் இருந்த ஒரு தையற் கடைக்குப் பறந்து சென்றது.

தையல் பொறியின் மேல் போய் உட் கார்ந்து கொண்டு அந்தத் தையற்கலைஞரைப் பார்த்து.

"அண்ணே! அண்ணே! தையற்கார அண்ணே, என் சிட்டுக் குஞ்சுகள் இரண்டும் நாளைக்குப் பள்ளிக் கூடத்திற்குப் போகின்றன.