பக்கம்:பள்ளிக்குச் சென்ற சிட்டுக்குருவிகள்.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

14

சீருடைகள் தைத்துக் கொடுங்கள் அண்ணே” என்று கேட்டது.

தையற்காரரும் அதற்கு உடனே இரண்டு சீருடைகள் தைத்துக் கொடுத்தார். மறுநாள் காலைஇரண்டுசிட்டுக் குருவிகளும் அழகான அந்தச் சீருடைகளை அணிந்து கொண்டு பள்ளிக்கூடத்துக்குப் புறப்பட்டன.

சீருடையோடு அவை தத்தித்தத்தி நடந்து சென்ற காட்சி அழகைக் கண்டு அரச மரத்துப் பறவைகளெல்லாம் மகிழ்ச்சி கொண்டன.

எல்லாப் பறவைகளின் வாழ்த்துக்களோடு அவை பள்ளிக் கூடத்திற்குப்போய்ச் சேர்ந்தன.

மழலையர் வகுப்பில் அவற்றை உட்கார வைத்து விட்டு, அம்மாச் சிட்டு அரசமரத்திற்குத் திரும்பியது. பிறகு இரைதேடச் சென்று தன் குஞ்சுகளுக்குப் பள்ளிக் கூடத்தில் பகல் உணவு கொண்டு போய்க் கொடுத்தது.

மாலை நான்கு மணிக்கு மீண்டும் சென்று கூட்டுக்குக் கூட்டிக் கொண்டு வந்தது.