பக்கம்:பழங்கதைகளும், பழமொழிகளும்.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இ. 28 . . . . . . . . . . . . . . . . பழங்கதைகளும் பழமொழிகளும் ಇಣ வசந்தகால விழாவின்போது பாபிலோனியாவில் மார்டக் ஒரு புறாவை இரண்டாக வெட்டினான் என்ற புனைகதையின் அடிப்படையில் ஒரு சடங்கு பண்டைய பாபிலோனியாவில் கொண்டாடப்பட்டது. அந்தப் புறா இயாஹூவைக் குறிக்கும். தியாமத்தின் உடலை இரண்டு கூறாக வெட்டி உலகையும் வானத்தையும் மார்டக் படைத்தான் என்ற பாபிலோனியப் புனைகதையோடு இச்சடங்கிற்குத் தொடர்புள்ளது. இக்கதை புனைந்தவர்களது சமூகநிலை தாய்வழிச் சமுதாய நிலையே என்பது உறுதி. கிரேஸ் கூறும் விளக்கத்தைக் கண்டோம். கார்டன் சைல்ட், நியோலிதிக் A, நியோலிதிக் B என்ற பண்பாட்டுநிலை முதலே கிரேக்கத்தின் பண்பாடு காணப்படுகிறது. பாலியோலிதிக் இல்லை என்கிறார்." அது மட்டுமல்லாமல் நீண்ட காலமாக மேய்ச்சல் விவசாயப் பண்பாட்டு நிலைகள் பிரியவில்லை என்றும் கூறுகிறார். எனவே தாய்வழிச் சமுதாயம் வேறு சமுதாயங்களோடு போராடாமல் வாழ்ந்த காலத்தில் இக்கதை தோன்றியிருத்தல் வேண்டும். 2. இரண்டாவது கிரேக்கப் படைப்புக் கதையொன்று ஹோமர், ஆர்பியூஸ் என்னும் கவிஞர்களால் இலியாதிலும் ஆர்பியூஸின் கவிதைகளிலும் குறிக்கப்படுகிறது." எல்லாத் தேவர்களும், ஜீவராசிகளும் ஒஷியானஸ் என்னும் உலகைச் சுற்றி ஒடும் நீரோட்டத்தில் தோன்றின என்றும் டெதிஸ் என்னும் தெய்வம், ஒஷியானஸ் என்னும் தேவனது குழந்தைகளின் தாயென்றும் கூறுகிறார்கள். ஆனால் ஆர்பியூஸின் கவிதைகளில் எலீயூஸ் என்னும் தேவர்க்கரசன் கூட அஞ்சி நடுங்கும் வல்லமையுடைய கறுப்புச் சிறகுடைய இருள் என்னும் தேவியைக் காற்று காதலிக்க அக்காதலின் விளைவாக ஒரு வெள்ளி முட்டையை அவளுடைய கருப்பையில் வைத்தான் என்றும், அம்முட்டையில் இருந்து ஈராஸ் என்னும் காதல் தேவன் பிறந்து உலக இயக்கத்தை துவங்கி வைத்தான் என்றும் அவர் கூறுகிறார். ஈராஸ் ஆனும் பெண்ணுமான உறுப்புடையவன்; தங்கச் சிறகுகள் உடையவன்; நான்கு தலைகளையுடையவன். சில வேளைகளில் காளையைப் போலவும், சில வேளைகளில் சிங்கத்தைப் போலவும் கர்ச்சிப்பான். சில வேளைகளில் ஆட்டைப் போலவும் கத்துவான். இரவுத்தேவி அவனுக்கு மூன்று பெயரிட்டாள். இரவில் மூன்று வடிவமாக அவள் அவனுக்குத்