பக்கம்:பழங்கதைகளும், பழமொழிகளும்.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ធ្លក សារឌើស - • » • - S S0 0SS CS S S S S S S S z LS LS S C z C C S S S C 27 ஒலிம்பஸ் மலையில் யூரிநோமும், ஒபியானும் வாழ்ந்தனர். “நான் தான் உலகத்தைப் படைத்தேன்” என்று கூறி அவன் அவளைச் சீற்றமுறச் செய்தான். அவள் தனது குதிங்காலால் அவன் தலையில் மிதித்துக் காயம் உண்டாக்கினாள். அவனை உலகின் இருண்ட குகையில் சென்று வாழும்படி விரட்டிவிட்டாள். அடுத்து அவள் ஏழு கிரகங்களையும் படைத்தாள். ஒவ்வொரு கிரகத்திலும் ஒரு ராட்சஸியையும், ராட்சஸ்னையும் வாழ அனுப்பினாள் (கதை ஒவ்வொரு கிரகத்திற்கும் அனுப்பப்பட்ட ராட்சலி, ராட்சஸர்களின் பெயர்களைக் கூறுகிறது). முதன் முதலில் படைக்கப்பட்ட மனிதன் பெலாஸ்கஸ், அர்க்காடியாவில் வாழ்ந்த பெலாஸ்கஸியர் என்ற இனத்தாளின் மூதாதை அவன். அவனுக்குப்பின் வேறு மனிதர்கள் படைக்கப்பட்டனர். எல்லோருக்கும் அவன் தோலை உடுக்கக் கற்றுக் கொடுத்தான். குடிசை கட்டவும், தானியம் சேகரிக்கவும் கற்பித்தான். "இக்கதை பிளினியின் இயற்கை வரலாறு ஹோமரின் பெலாஸ்ஜியர் வரலாறு கூறும் இலியாதின் பகுதி, அப்பலோனியஸ், ரோடியஸ் என்ற பழம் புலவரது ஆர்கோ நாடிகா என்ற நூல்கள், முந்தையர் செவிவழிக் கதைகளெனக் குறிப்பிடப்பட்டுள்ளன.” இந்தப் புனைகதையைப் பல மூலங்களிலிருந்து புனர் நிர்மாணம் செய்து எழுதிய பேராசிரியர் கிரேவ்ஸ், இக்கதை தோன்றிய சமுதாய வரலாற்றுச் சூழ்நிலைகளைக் குறிப்பிடுகிறார்: “இக்கதையின் சமய நம்பிக்கையில் தேவர்களும், பூசாரிகளும் காணப்படவில்லை. ஒரு உலகமாதா நம்பிக்கையும் அவளுடைய தேவராட்டிகளும் மட்டுமே இருந்த காலத்தில் இக்கதை பிறந்திருக்க வேண்டும். பெண்ணே வலிமையும், ஆதிக்கமும் உடையவள். ஆண் அவளுக்கு அஞ்சி வாழும் வலிமையற்ற ஜீவன். கருவுறுவதற்கு ஆண் தேவையில்லையென்றும் காற்று மட்டுமே போதும் என்றும், அக்கால மக்கள் கருதினர்." தாய்வழித் தாய உரிமைதான் அக்காலத்தில் இருந்தது. பாம்பு முன்னோர்களின் உருவம் என்றெண்ணப்பட்டது. சந்திரன் என்னும் பெண் தெய்வமாக யூரினோம் கருதப்பட்டாள். இவளுடைய சுமேரியப் பெயர் இயாஹி. அம்மொழியில் இச்சொல்லுக்கு புற என்பது பொருள். யூதர்களின் படைப்புத் தெய்வமான யஹோவா என்ற பெயர் இச்சொல்லிலிருந்துதான் தோன்றியது.