பக்கம்:பழங்காலத் தமிழர் வாணிகம்.pdf/96

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பேரியாறு மேற்குக் கடலில் விழுந்த இடத்தில் முசிறித் துறைமுகம் அமைந்திருந்தது. சேர நாட்டுத் தலைநகரமாக அக்காலத்தில் இருந்த வஞ்சி (கரூர்) நகரம், பேரியாறு கடலில் விழுந்த இடத்துக்கு அருகில் பெரியாற்றின் கரை மேல் இருந்தது, வஞ்சி நகரத்திலே சேர அரசர் வாழ்ந்திருந்தார்கள். (இந்தச் சேரர் வஞ்சி, கொங்கு நாட்டு வஞ்சி (கரூர்) அன்று. சேர நாட்டிலும் கொங்கு நாட்டிலும் வஞ்சி என்றும் கரூர் என்றும் பெயர் பெற்றிருந்த இரண்டு ஊர்கள் சங்க காலத்தில் இருந்தன.) சேர நாட்டுத் தலை நகரமான வஞ்சிமா நகரத்துக்கு மேற்கே கடற்கரையில் பேரியாறு கடலில் சேர்ந்த புகர் முகத்தில் முசிறித் துறைமுகப் பட்டினம் இருந்தது.

முசிறித் துறைமுகத்தில் முக்கியமாக மிளகு ஏற்றுமதியாயிற்று. யவனக் கப்பல்கள் மிளகை வாங்குவதற்காகவே முசிறிக்கு வந்தன. யவனர் முரிறியை முசிறிஸ் என்று கூறினார்கள். வால்மீகி இராமாயணம் முசிறியை முரசி பதனம் என்று கூறுகின்றது. முசிறி வட மொழில் 'முரசி' ஆயிற்று. முசிறிக் கடலில் முத்துச் சிப்பிகளும் உண்டாயின. சிப்பியிலிருந்து முத்து கிடைத்தது. முசிறியில் உண்டான முத்துக்களைக் கவ்டல்லியரின் அர்த்த சாத்திரம் கௌர்ணெயம் என்று கூறுகின்றது. பேரியாற்றுக்குச் சூர்ணியாறு என்றும் பெயருண்டு. சூர்ணியாற்றின் முகத்துவாரத்தில் உண்டானபடியால் இந்த முத்து கௌர்ணெயம் என்று பெயர் பெற்றது. சௌர்ணெயம் என்னும் பெயர் திரித்து கௌர்ணெயம் என்றாயிற்று. முசிறிக் கடலில் உண்டான முத்துக்கள் முசிறிப் பட்டினத்தின் ஒரு பகுதியான பந்தர் என்னும் இடத்தில் விற்கப்பட்டன. முசிறிப் பட்டினத்தைச் சேர்ந்த பந்தரில் முந்துக்களும் கொடுமணம் என்றும் இடத்தில் பொன் நகைகளும் விற்கப்பட்டன் என்று பதிற்றுப் பத்து கூறுகிறது.

'இன்னிசைப் புணரி இரங்கும் பௌவத்து
நன்கல வெறுக்கை துஞ்சும் பந்தாக்
கமழுந் தாழைக் கானலம் பெருந்துறை'

(6 ஆம் பத்து 5)

93