பக்கம்:பழந்தமிழர் கட்டடக் கலையும் நகரமைப்பும்.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நா. பார்த்தசாரதி

51


2. பசுவின் கொம்பு, பல தானியங்கள், செங்கல், பஞ்சலோகம் (ஐம்பொன்) இவற்றுள் எது கிடைத்தாலும் செல்வம் மேன்மேலும் பெருகும்.

3. பொன், வெள்ளி, செம்பு இவற்றில் யாதொன்று அகப்பட்டாலும் நன்மையே - புதையல் கிடைத்தாலோ மிகப்பெரிய இன்பம் விளையும். இரும்பு, ஈயம், பித்தளை இவற்றுள் யாதொன்று கிடைத்தாலும் குறைந்த நற். பலனே விளையும்.

தீய விளைவுகள்

தோண்டிய மனையுள். 1. உடும்பு, 2. பாம்பு, 3. தேன்கூடு, 4. ஆமை, 5. பூரான், 6. வண்டு ஆகியவை தென்பட்டால் வீடு தீப்பட்டு அழியுமாம். 17

1. எறும்பு, 2. தேள், 3 கரையான், 4. மரக்கட்டை 5. முட்டை, 6. நகம், 7. உரோமம், 8. மண்டையோடு, 9. எலும்பு ஆகியவற்றுள் ஒன்றோ சிலவோ தென்படுமாயின் பெருந்தீங்கு நேரிடுமாம். 18

அகழ்ந்த மண் பரப்பில்,

கரி தோன்றினால், பிணியும்
உமி தோன்றினால், செல்வக்கேடும்
விறகு தோன்றினால், குல அழிவும்

நேரிடும் என்கிறது. 19

கருங்கல்லோ, எலும்போ தென்பட்டால் மனையாள் உயிர்ச் சேதமும் மனைக்குரியோனுக்குப் பிணியால் நலிவும் நேரிடும்.

மேற்கூறிய ஏதுக்களால் மனையை அகழ்ந்து பார்க்காமல் வீடு கட்ட முயலக்கூடாது என்றும் அவ்வாறு ஆராயாமல் கட்டிவிட்டால் நடக்கும் தீய நிகழ்வுகளைக் கொண்டே கட்டப்பட்ட மனையின் எந்தெந்தப் பகுதியில்