பக்கம்:பழந்தமிழர் கட்டடக் கலையும் நகரமைப்பும்.pdf/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நா. பார்த்தசாரதி

89


இவ் ஓவியக் காட்சி தேவியின் உள்ளத்தை உருக்கியது. மேலும் நக்கீரர்க்கு ஒவியம், சிற்பம், கட்டடக் கலை ஆகியவற்றில் ஈடுபாடு இருந்தமை நெடுநல்வாடையால் உணரப்படுகிறது.

அரண்மனை வகுத்துக் கட்டப்பட்ட முறையை, அது கால்கோள் செய்யப்பட்ட நாள் முதலாக எடுத்துரைக்கிறார்.

அரண்மனை வாயில் முற்றம், அந்தப்புரத்தின் அமைப்பு, அரசி படுத்திருக்கும் வட்டக் கட்டில், அதன் விதானம், படுக்கையின் அமைப்பு யாவும் சிற்ப உத்தித் திறனோடு புனையப்பட்டுள்ளன. கட்டிற்காலில் உருண்டு திரண்டிருக்கும் குடம் போன்ற உறுப்பைத் ‘தூங்கு இயல் மகளிர் வீங்குமுலை கடுப்பப் புடைதிரண் டிருந்த குடத்த” என்று நுட்பமாக விளக்குகிறார். அசையும் நடையினை உடைய மகளிர் என்பதனால் கருக்கொண்ட மகளிர் என்பதைக் குறிப்பாக உணர்த்தியிருக்கும் அழகிலேயே சிற்ப நுட்பம் உளதன்றோ? பாண்டியனுக்கு முன்னதாகப் பாசறைக்கண் நள்ளிரவில் தீவட்டி பிடித்துச் செல்லுகையில் வாடைக்காற்று வீசுவதால் அதன் சுடர் தெற்கே சாய்ந்து எரிவதையும் நக்கீரர் குறிப்பிடுகிறார்.

வடந்தைத் தண்வளி எறிதொறும் நுடங்கி
தெற்கு ஏர்பு இறைஞ்சிய தலைய நன்பல்
பாண்டில் விளக்கில் பரூஉச்சுடர் அழல

(நெடுநல். 173-75)

இக்காட்சியும் சிற்பத் திறனை நுட்பமாகக் குறிப்பிடுவதாகும். இங்கனம் வரும் பல பகுதிகளை நோக்கும் பொழுது நெடுநல்வாடையைச் சிற்பப் பாட்டு’ (Sculpture Poem) என்றே அழைக்கலாம் எனத் தோன்றுகிறது.2

'நாள் பார்த்தல் '

பழைய நம்பிக்கைகள் - பழக்க வழக்கங்களின் அடிப்படையில் எழுந்தவை என இவ்வாய்வின் முந்திய