பக்கம்:பழமொழி நானூறு-மூலமும் உரையும்.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

60

பழமொழி நானூறு மூலமும் உரையும்



உடலா ஒருவற்கு உறுதி யுரைத்தல் கடலுளால் மாவடித் தற்று. அறிவுடையோர் புல்லறிவு உடையோருக்கு உபதேசம் செய்வதற்கு முயலுதல் கூடாது; அவர்க்கு உரைப்பது எல்லாம் வீணே என்பது கருத்து.'கடலுளால் மாவடித் தற்று’ என்பது பழமொழி. 120 121. பணம் உடையவர்க்கு ஆகாதது இல்லை -

விளங்கும் நீர்ப்பெருக்கினையுடைய கடற்கரைக்குரிய நாட்டினனே! பொருள் உடையவர்களின் செயல்கள் எல்லாம், இடையிலே முடிதல் இல்லாமற்போகாமல்,நல்லதாகவே முறை யாக முற்றவும் நடந்து முடியும்; பொருள் வசதி இல்லாதவர் களுக்கோ, அவர்கள் செயல்கள் எல்லாம் மிகவும் வருத்தத்துட னேயே நடந்து வரும் அதனால்,பொருள்வளம் உடையவர், கடலினுள்ளே செல்பவரானுலுங்கூட, அங்கும், தமக்கு நன்மையான தக்க வசதிகளைச் செய்து கொள்ளக் கூடியவர்கள் என்று அறிவாயாக

ஒல்லாத இன்றி உடையார் கருமங்கள் நல்லவாய் நாடி நடக்குமாம்--இல்லார்க்கு இடராவியலும், இலங்குநீர்ச் சேர்ப்ப கடலுள்ளும் காண்பவே நன்கு.

பொருள், வாழ்வுக்கு மிகவும் தேவை என்பதைச்சொல்வது இதுபொருள் உடையவர்காரியங்கள் நிறைவேறுவதும்,பொருள் இல்லாதவர் காரியங்கள் தடைப்படுவதும் உலக இயல்பு. ‘கடலுள்ளும் காண்பவே நன்கு என்பது பழமொழி. 121 122. சான்றோர் என்றும் யாசியார்

பனை மடல்களின் இடையிலேயுள்ள தம் கூடுகளோடு கடற்பறவைகளும் சேர்ந்து ஆராவாரிக்கின்ற, பெரிய கடற்கரை களுக்கு உரியவனே! கடலோடுதுரும்பு ஒரு போதுமே சேர்ந்து இருப்பதில்லை.அதுபோலவே, தம்முடைய உடலானது ஒடுங் கும்படியான அளவுக்குப் பசித்தாலும், மாண்பு உடையவர்கள், பிறருடைய பொருள்களை அடைய விரும்பி, அவர்பாற் சென்று நின்று யாசிக்கவே மாட்ட்ார்கள்.

மடங்கிப் பசிப்பினும் மாண்புடையாளர் தொடங்கிப் பிறருடைமை மேவார்--குடம்பை மடலொடு புட்கலாம் மால்கடற் சேர்ப்ப! கடலொடு காட்டொட்டல் இல்.