பக்கம்:பவள மல்லிகை.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

76 பவள் மல்லிகை

3 யானைத் தீவில் உளியின் ஒலி ஒலிக்கத் தொடங்கியது.

ஒரு பெண்ணின் உற்சாகப் பேச்சானது கலைஞர்களைத் தாண்டி விட்டது. மாணிக்கம் ஒரு பக்கமும் நீலன் ஒரு பக்கமும் மலையைக் குடையலானர்கள். உதவிக்கு வேறு சிலரையும் அவர்கள் கூட்டிக் கொண்டார்கள். இந்த வேலையில் வெற்றி பெற்ருல் தங்கத்தின் காதல் கிடைக்கும் என்ற ஆசை அவர்களுக்குப் போதை ஊட்டியது; முக்கிய மாக மாணிக்கத்துக்கு இப்போது அளவற்ற ஊக்கம் உண் டானதற்கு அதுதான் காரணம். லேனுக்கும் அந்த ஆசை இல்லாமற் போகவில்லை. -

இரண்டு குகைகள் உருவாகிக் கொண்டிருந்தன. லேன் குடைந்த குகை சற்றுப் பெரிதாக இருந்தது. மாணிக்கத்தின் குகை அவ்வளவு பெரிதன்று. வேலை வேகமாக நடந்தது. மாதக் கணக்கில் நடந்தது. வரு விங்கள் கூட ஆயின. -

கலைஞர்கள் வேலை செய்து கொண்டிருந்தார்கள். அப் போது தங்கம் தன் தகப்பைேடு வந்த பார்த்துப் போவாள். ஒரு விதமாக மாணிக்கம் குகையைக் குடைக் தான். தூண்களைச் செதுக்கத் தொடங்கினன். இதற்கே இரண்டு வருஷங்கள் ஆகிவிட்டன. தினந்தோறும் வரா மல் வாரம் இரண்டு மூன்று முறை வாலானன்.

நீலனே குகையோடு ஐக்கியமாய்ப் போய் விட்டான். என்றைக்காவது ஒரு நாள் ஊர் போவது, மற்ற நாட் களில் யானைத் தீவிலே இருந்து விடுவது. கண்னும் கருத்துமாகக் குகையைக் குடைவதில் அவன் ஈடுபட்டி ருந்தான். அவனுக்கு இப்பொழுதெல்லாம் வேறு எந்த கினைவும் வரவே இல்லை. வெறும் குகையைக் குடைவ தோடு அவன் லட்சியம் அமைந்து விடுவதாகத் தெரிய

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பவள_மல்லிகை.pdf/82&oldid=592136" இலிருந்து மீள்விக்கப்பட்டது