பக்கம்:பவள மல்லிகை.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

78 பவள மல்லிகை

இவர்கள் ஆரம்பித்து மூன்று வருஷகாலம் ஆய் விட்ட தல்லவா?’ என்ருள்,

ஆம்' என்று தலையசைத்தான் அவன். "மாணிக்க அத்தான் வேலையை முடித்து விட்டார்; ஆனல் லே அத்தான் எப்பொழுது முடிப்பாரோ?”

"எதற்குக் கேட்கிருய்?' என்ருன் தகப்பன். 'லே அத்தான் இப்போதைக்குத் தாம் எடுத்துக் கொண்ட வேலையை முடிப்பாரென்று தோன்றவில்லை. இன்னும் எத்தனை வருஷங்கள் ஆகப் போகின்றனவோ ஆகட்டும், ஆகட்டும்'

'அதுவரைக்கும் நீ கல்யாணம் செய்து கொள்ளா மலே இருக்கப் போகிருயா? என்று தகப்பன் கேட் டான். அந்தக் கேள்வி மாணிக்கத்துக்கு ஆறுதலைத் தந் தது. ஆனல் அடுத்த கணத்தில், “என்ன சொல்லப் போகிருளோரி' என்ற வேதனையையும் தந்தது.

'நான் கிழவியான பிற்பாடு கல்யாணம் பண்ணிக் கொள்வதானல் காத்திருக்கலாம்” என்று சிரித்தாள் தங்கம்.

மாணிக்கம் உள்ளே கிளுகிளுத்தான். தகப்பனே ஒன்றும் தெரியாமல் விழித்தான்.

"அப்பா, நான் ஒரு முடிவுக்கு வந்து விட்டேன். மாணிக்க அத்தானையே கல்யாணம் பண்ணிக் கொள்வ தாகத் தீர்மானம் செய்துவிட்டேன். ஆனல் ஒரு கிபந்தனை: நீல அத்தானுக்கு காங்கள் கல்யாணம் செய்துகொண்ட செய்தியை யாரும் தெரிவிக்கக் கூடாது' என்ருள்.

மாணிக்கத்துக்கு உடம்பெல்லாம் புல்லரித்தது. தான் இருப்பது பூலோகமோ கைலாசமோ என்று இருக் தது, அசட்டுச் சிரிப்புச் சிரித்துக் கொண்டான். 'என்ன மாமா, தங்கம் சொல்வதைக் கேட்டீர்களா?' என்ருன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பவள_மல்லிகை.pdf/84&oldid=592144" இலிருந்து மீள்விக்கப்பட்டது