உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பவழபஸ்பம்.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2

வர்ணாஸ்ரமம்


I

"பாகனே! தேரை விரைவாகச் செலுத்து.

"நற்றிறம் வாய்ந்த பாகனே! தேர் விரைந்து செல்வதாக!"

"விரைந்து செல்லவேண்டும். அங்குதான்! அறியாயோ நீ? கேள்!"

"பைங்கிளியே! மழலை பல பேசவல்லாய் எனினும், நான் கேட்டுக் களித்திட ஒரே ஒரு சொல் கூறு; வேறு வேண்டிலேன். அவர் இன்று வருவார் என்றுரை. நம்மைப் பிரிந்து சென்றவர், இன்று வருவார் எனும் இன்சொல்லை, கிளியே, நீ கூறு' என்று தன் முன்கையில் அமர்ந்துள்ள தத்தையினைக் கேட்கும், என் கிளிமொழியாளின் இல்லத்திற்குச் சென்றாக வேண்டும், விரைவாக! நொந்த மனத்துடன் வெண்மதிநுதல் சுருங்க, கிள்ளையுடன் பேசும் சொல்லினை வீட்டார் கேட்டிடுவரோ; என்று பயந்து, நாணி உரையாடுவாள் அந்நங்கை, தன் அங்கையில் கிளி ஏந்தி! அவள் துயர் துடைக்க, நாணம் நீக்க நான் செல்ல வேண்டும். நற்றிறம் படைத்த பாகனே! செலுத்துக தேரினை விரைந்து!! சிவந்த மாலையை யணிந்தது போன்ற கழுத்தினையுடைய, அந்தப் பச்சைக் கிளி, பலப்பல பேசவல்லது தான். எனினும் ஒரே ஒரு சொல் நீ உரைப்பாய், 'இன்று வரல் உரைமோ' என்று மட்டுமே கேட்கிறாள், என் மனத்தைக் கோயில் கொண்டாள்! என் செய்வாள் ஏந்திழை? இல்லத்துள்ளோர் அறிந்திடுவாரோ என்ற அச்சம்; அஞ்சு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பவழபஸ்பம்.pdf/43&oldid=1638978" இலிருந்து மீள்விக்கப்பட்டது