பக்கம்:பாசமுள்ள நாய்க்குட்டி.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

50


அரசன் தன்னைத் தானே நிர்வாணமாக்கிக் கொண்டு ஊர்வலம் வந்து விட்ட அவலத்தை எண்ணி மனம் குன்றிப் போனான்.

அங்கங்கே நிற்கும் மக்கள் தன் மூடத் தனத்தைப் பற்றிக் குசுகுசு வென்று கமுக்கமாகப் பேசிக் கொள்வதைப் பார்த்து வெட்கித் தலை குனிந்தான். வேக வேகமாகத் தேரைத் திருப்பி அரண்மனைக்குக் கொண்டுவரச் சொல்லித் தன் அறைக்குச் சென்று ஆடையணிந்து கொண்டான்.

தன்னை ஏமாற்றிய எத்தர்களைப் பிடித்து வரும்படி கட்டளையிட்டான். ஆனால், அவர்கள் நிலைமை மாறிவிட்டதை யுணர்ந்து கூட்டத்துக்குள் கலந்து மறைந்து ஊரை விட்டு ஓடி விட்டார்கள்.