பக்கம்:பாஞ்சாலி சபதம், தொ. மு. சி. ரகுநாதன்.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இதழ்களும்* ' கூடுகின்றன. ' 'மாதாவின் சேவைக்காக இரண்டு உள்ளங்களும் ஒன்றுபடுகின்றன. பிரகிருதி வடிவமாகத் தோன்றிய மாதாவின் முகத்திலே புன்னகை காணப்பட்டது என்று கூறி முடிகிறது 'ஆறில் ஒரு பங்கு' என்ற கதை. இந்தக் கதைச் சுருக்கத்தைப் பார்த்தாலும் சரி, மொத்தத்தில் கதை முழுவதையுமே படித்துப் பார்த்தாலும் சரி, **தேச சேவை செய்ய வேண்டுமெனில் ஒருவன் பிரமசாரியாக இருத்தாக வேண்டிய அவசியம் இல்லை. காதலித்துக் கருத்தொருமித்த இருவர் தமக்குள் திருமணம் செய்துகொண்டு இருவருமே தேச சேவையில் ஈடு . படலாம். அதனால் தேச மாதாவுக்கு ஒரு தொண்டனுக்குப் பதிலாக இரண்டு தொண்டர்கள் கிடைப்பார்கள் என்ற கருத்துத்தான் இந்தக் கதையில் வலியுறுத்தப்பட்டுள்ளது என்பது எவருக்கும் புலனாகும், அதே சமயம் அன்றைய வெள்ளை அரசாங்கம், தடை செய்யக் கருதிய அளவுக்கு, இது என்ன அத்தளை அபாயகரமான கருத்தா. என்ற வியப்பும் ஏற்படும், பாரதியின் கடிதங்கள் சொல்லப் போனால். 'கனவு' என்ற தனது சுய சரிதையையும்,

  • ஆநீல் ஒரு பங்கு' என்ற கதையையும் ஆங்கிலேய அரசாங்கம்

தடை செய்த பின்னர், அவ்வாறு தடை செய்தது சரியல்ல என்பதைக் கூற வந்த பாரதியும்கூட, 'இவற்றில் என்ன அபாயகரமான கருத்து இருக்கிறது?' என்றுதான் வாதிட்டான், 3-10-1912 அ ன் று அவன் 'ஹிந்து' பத்திரிகையின் ஆசிரியருக்கு எழுதி, அந்தப் பத்திரிகையில் வெளிவந்திருந்த அவனது கடிதம் ஒன்றில் இவ்வாறு எழுதியிருந்தான், T0 The Editor of 'THE HINDU Sir, I apoptai' to the people of India - in whose narrate the Government of India is carried on-against the injustice of t!!e said government in prOscribing my two innocuous Tami' booklets KANAVJ (Dream), a poem, and ARfLORU PANGU (One-sixth), a short story - obviously on the presumption that