பக்கம்:பாஞ்சாலி சபதம்-ஒரு நோக்கு.pdf/141

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இயல்-11 காவியம் உணர்த்தும் உண்மை வாழ்க்கையிலும் மனிதப் பண்பிலும் உள்ள பொதுத் தன்மையை எடுத்துக் கூறுவதே கவிதையின் நோக்கமாகும். 'யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்' என்ற உயர்ந்த குறிக்கோள் கவிதைத்துறையில் எளிதாக நிறைவேறி விடு கின்றது. கவிஞனின் மனத்தில் தோன்றிய அநுபவமே கவிதை யாக முடிகின்றது; வடிவம் கொள்ளுகின்றது. கவிதையைப் படிக்கும் நாமும் அக்கவிஞன் பெற்ற அநுபவத்தையே பெற்று விட்டால், கவிதையும் உணர்த்த வேண்டியவற்றை உணர்த்தி விடும் நிலையை அடைந்து விடுகின்றது. திருவாசகத் தேனை மாந்திய அறிஞர்களில் பலர் தம் அநுபவத்தை வெளியிட்டுள்ளனர். வேற்றுச் சமயத்தைச் சார்ந்த வேற்று நாட்டினராகிய ஜி.யு. போப் இதன் பக்திச் சுவையில் ஈடு பட்டு இதனை யொத்த பக்தி நூல் யாண்டும் இல்லையென்து கூறினார். சிவப்பிரகாச அடிகள், திருவாசகம்இங் கொருகால் ஒதின் கருங்கல் மனமும் கரைந்துகக் கண்கள் தொடுமணற் கேணியின் சுரந்துநீர் பாய அன்பர் ஆகுநர் அன்றி மன்பதை உலகில் மற்றையர் இவரே." 1. நால்வர் நான்மணி மாலை-A