பக்கம்:பாடிப் பணிவோம்.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உலகமெல்லாம் காத்தருளும் கருமாரி - அம்மா உன்னருளே வேண்டிவந்தோம் கருமாரி. தலமகிமை அறிந்துவந்தோம் கருமாரி - உன் சக்தியெல்லாம் உணர்ந்துவந்தோம் கருமாரி. ஐந்துதலே நாகம்வந்து கருமாரி - உனக்(கு) அழகுக்குடை பிடித்திடவே கருமாரி ஐந்தொழிலைச் செய்துவரும் கருமாரி - நாங்கள் அடிபணிந்தே அகமகிழ்ந்தோம் கருமாரி. உடுக்குடனே சூலம்ஏந்தி கருமாரி - தீமை ஒழித்திடவே உலகில்வந்தாய் கருமாரி, கொடுத்துவைத்தோம் நாங்களெல்லாம் கருமாரி-உன் கோயில்வந்து கும்பிடவே கருமாரி. ஜொலிக்கும்உன்றன் திருஅழகில் கருமாரி - நாங்கள் சொக்கிநின்ருேம் சன்னதியில் கருமாரி. குலுங்கும்.உன்றன் சிலம்பொலியில் கருமாரி - அம்மா குளிர்ந்ததுவே உள்ளமெல்லாம் கருமாரி. 27

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாடிப்_பணிவோம்.pdf/31&oldid=811417" இலிருந்து மீள்விக்கப்பட்டது