பக்கம்:பாடிப் பணிவோம்.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

படங்கள் இல்லாமல் என் புத்தகங்கள் எதுவுமே வெளிவந்த தில்லே என்பதை நன்குணர்ந்த நண்பர் சிவராமன், இப் பாடல்களையும் படங்களுடன் வெளியிட விரும்பினுர், இன்றுள்ள நிலையில் படங்களுடன் புத்தகங்களை வெளி யிடப் பதிப்பாளர்கள் பெரிதும் தயங்கும்போது, திரு. சிவராமன் அவர்கள் படங்களுடன் பாடல்களை வெளியிடு வதெனத் துணிச்சலாக முடிவு செய்தார். இந்தத் துணிகர முயற்சிக்குத் துணைநின்றவர் நண்பர் திரு. ஆழி. வே. ராமசாமி அவர்கள். சிறந்த குழந்தை நூல்களை இயற்றிப் பல பரிசுகளேப் பெற்ற அவர் இப்புத்தகத்திற்கு மிகுந்த விருப்பமுடன் படங்கள் வரைய முன்வந்தார். பதிப்பாளர் திரு. சிவராமன் அவர்களுக்கும், எழுத்தாளர்-ஒவி யர் திரு. ஆழி, வே. ராமசாமி அவர்களுக்கும் என் மனங் கனிந்த நன்றி. இளம் உள்ளங்களிலே பக்தி விதையைப் பாவும் ஒரு சிறு முயற்சியே இது. பக்தியுடன் இறைவனைப் பாடிப் பணிய முயலுவோருக்கு இந்நூல் ஓரளவாவது பயன்படுமென நம்புகிறேன். காரைக் குடி, i 8–7–79. அழ. வள்ளியப்பா

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாடிப்_பணிவோம்.pdf/9&oldid=811456" இலிருந்து மீள்விக்கப்பட்டது