இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
குயிலெனக் கூவுவோம்.
崇
மலர்விரி சோலையை நாடிடுவோம்
மயிலென மகிழ்வுடன் ஆடிடுவோம்
மலர்தொறும் வண்டெனப் பாடிடுவோம்
மனங்கவர் குயிலெனக் கூவிடுவோம்
கூவிடுங் குரல்தனைத் தடுத்திடவே
கொடுமைகள் வருமெனில் துடித்தெழுவோம்
ஏவிடும் வேலுரு வெடுத்திடுவோம்
எதிர்ந்திடும் பகைதனை அடக்கிடுவோம்.
கனிநிகர் கவிதைகள் படைத்திடுவோம்
காவியம் பற்பல தொடுத்திடுவோம்
இனிமைகள் யாவையும் படைத்திடுவோம்
இடர்தருஞ் செயல்களைத் தடுத்திடுவோம்
வறுமையின் கொடுமையைப் போக்கிடுவோம்
வளமைகள் யாவுமே ஆக்கிடுவோம்
சிறுமைகள் நம்மிடம் நீக்கிடுவோம்
சிந்தனை நெஞ்சினில் தேக்கிடுவோம்