பக்கம்:பாடுங்குயில்.pdf/104

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கவிதை எழுதிய காகிதம்

2 -g aール ??g*

கவிதை எழுதிய காகிதம் ஆனேன்-அவர் கவிதையைச் சுவைத்ததும் கன்னியை மறந்தார்

-கவிதை புவியோர் போற்றும் புலமையில் உயர்ந்தார் போனவர் இன்னும் ஏன்வர அயர்ந்தார்

- கவிதை கையில் எடுப்பார் கண்வழி படிப்பார் காணும் மகிழ்வால் நெஞ்சது துடிப்பார் செய்ய இதழ்கள் சிறிதுடன் மடிப்பார் செந்தமிழ்ப் பாட்டின் செழுந்தேன் குடிப்பார்

-கவிதை ஒவ்வொரு சொல்லிலும் உளத்தினைக் கொடுப்பார் ஒளிவிடும் அணியின் உயர்வினை வியப்பார் செவ்விய அடிதொடை சீர்எழில் தொடுப்பார் செந்தமிழ்ப் பாட்டின் செழுந்தேன் குடிப்பார்

-கவிதை

100

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாடுங்குயில்.pdf/104&oldid=593979" இலிருந்து மீள்விக்கப்பட்டது