இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
நிமிர்த்திய தோளொடு வருவேன்-அங்கு
நின்றிடு வார்க்குரை தருவேன்
அமைச்சர்கள் வாழ்த்திட மகிழ்வேன்-என்றன்
அரியனை மீதினில் அமர்வேன்
கொடுமைகள் பொடிபடச் சிதறும்-என்வாய்
கோளரி யோவென அதிரும்
மிடிமைகள் இலையென உதிரும்-வஞ்சம்
மேவிய சூழ்ச்சிகள் கதறும்
மடம்படு சாதிகள் தொலையும்-அங்கு மதமெனும் போர்வைகள் கலையும்
கடவுளின் கதைகளும் விலகும்-செம்மைக்
கதிரவன் ஒளிதரப் பொலியும்
இலக்கண நெறியொடு திகழும்-இன்ப
இலக்கிய வாழ்வினில் மகிழும்
நிலத்தினில் உயர்வெனப் புகழும் -நல்ல
நீதிகள் தழுவுமென் றுலகம்.
111