பக்கம்:பாடுங்குயில்.pdf/115

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நிமிர்த்திய தோளொடு வருவேன்-அங்கு

நின்றிடு வார்க்குரை தருவேன்

அமைச்சர்கள் வாழ்த்திட மகிழ்வேன்-என்றன்

அரியனை மீதினில் அமர்வேன்

கொடுமைகள் பொடிபடச் சிதறும்-என்வாய்

கோளரி யோவென அதிரும்

மிடிமைகள் இலையென உதிரும்-வஞ்சம்

மேவிய சூழ்ச்சிகள் கதறும்

மடம்படு சாதிகள் தொலையும்-அங்கு மதமெனும் போர்வைகள் கலையும்

கடவுளின் கதைகளும் விலகும்-செம்மைக்

கதிரவன் ஒளிதரப் பொலியும்

இலக்கண நெறியொடு திகழும்-இன்ப

இலக்கிய வாழ்வினில் மகிழும்

நிலத்தினில் உயர்வெனப் புகழும் -நல்ல

நீதிகள் தழுவுமென் றுலகம்.

111

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாடுங்குயில்.pdf/115&oldid=593990" இலிருந்து மீள்விக்கப்பட்டது