பக்கம்:பாடுங்குயில்.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஏங்குதல் நீதியோ?

தாயன தின்னருள் பாடவைத்தாய் - துன்பந்

தாக்கிட ஏனுளம் வாடவைத்தாய்?

ஆயும் புலமையை நாடவைத்தாய் - அம்மா அப்புறம் ஏன்பொருள் தேடவைத்தாய்?

கைப்பொருள் என்னிடம் தங்கவிட்டால்-நெஞ்சிற்

காயங்கள் யாவையும் மங்கவிட்டால் மெய்ப்பொரு வளின்மணம் பொங்கவிட்டே-பார்ப்பேன்

மேனியில் பாமலர்த் தொங்கலிட்டே

விண்ணுல கொன்றனை நான்படைப்பேன் - அங்கே

விந்தைகள் ஆயிரம் மேலமைப்பேன்

மண்ணுல குய்ந்திடத் தேன்கொடுப்பேன் - இந்த

மைந்தனைத் துன்புற ஏன்விடுத்தாய்?

மாமயில் போலொரு மங்கையினுள் - நல்ல

மாலைச் சுடர்நிகர் செங்கையினுள்

காமுறு வேளையில் அங்கவளை - ஏைே கட்டுற வைத்தனை சங்கிலியால்?

18

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாடுங்குயில்.pdf/22&oldid=593891" இலிருந்து மீள்விக்கப்பட்டது