இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
ஏங்குதல் நீதியோ?
兴
தாயன தின்னருள் பாடவைத்தாய் - துன்பந்
தாக்கிட ஏனுளம் வாடவைத்தாய்?
ஆயும் புலமையை நாடவைத்தாய் - அம்மா அப்புறம் ஏன்பொருள் தேடவைத்தாய்?
கைப்பொருள் என்னிடம் தங்கவிட்டால்-நெஞ்சிற்
காயங்கள் யாவையும் மங்கவிட்டால் மெய்ப்பொரு வளின்மணம் பொங்கவிட்டே-பார்ப்பேன்
மேனியில் பாமலர்த் தொங்கலிட்டே
விண்ணுல கொன்றனை நான்படைப்பேன் - அங்கே
விந்தைகள் ஆயிரம் மேலமைப்பேன்
மண்ணுல குய்ந்திடத் தேன்கொடுப்பேன் - இந்த
மைந்தனைத் துன்புற ஏன்விடுத்தாய்?
மாமயில் போலொரு மங்கையினுள் - நல்ல
மாலைச் சுடர்நிகர் செங்கையினுள்
காமுறு வேளையில் அங்கவளை - ஏைே கட்டுற வைத்தனை சங்கிலியால்?
18