பக்கம்:பாடுங்குயில்.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கற்பனை வான்மிசை நான்பறப்பேன் - அங்கே

காதல் மகள்தரும் தேன்சுவைப்பேன்

பொற்புடை யாளவள் தானழைத்தாள் - வானில்

போய்வரு மென்சிற கேனறுத்தாய்?

இன்ப மெனுங்கடல் பாய்ந்திருப்பேன் - அங்கே:

எத்தனை எத்தனை ஆய்ந்திருப்பேன் . : மன்பதை உய்ந்திட ஈந்திருப்பேன் - நீயேன்

வந்தரு ளாமலே ஒய்ந்திருந்தாய்? *エ

உன்னை விடுத்தொரு சுற்றமில்லை - நெஞ்சில் : ஒட்டிய வேருெரு பற்றுமில்லை - - -- என்னைப் புரப்பதில் குற்றமில்லை - அம்மா o

ஏங்குதல் நீதியோ பெற்றபிள்ளை?

19

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாடுங்குயில்.pdf/23&oldid=593892" இலிருந்து மீள்விக்கப்பட்டது