இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
கற்பனை வான்மிசை நான்பறப்பேன் - அங்கே
காதல் மகள்தரும் தேன்சுவைப்பேன்
பொற்புடை யாளவள் தானழைத்தாள் - வானில்
போய்வரு மென்சிற கேனறுத்தாய்?
இன்ப மெனுங்கடல் பாய்ந்திருப்பேன் - அங்கே:
எத்தனை எத்தனை ஆய்ந்திருப்பேன் . : மன்பதை உய்ந்திட ஈந்திருப்பேன் - நீயேன்
வந்தரு ளாமலே ஒய்ந்திருந்தாய்? *エ
உன்னை விடுத்தொரு சுற்றமில்லை - நெஞ்சில் : ஒட்டிய வேருெரு பற்றுமில்லை - - -- என்னைப் புரப்பதில் குற்றமில்லை - அம்மா o
ஏங்குதல் நீதியோ பெற்றபிள்ளை?
19