பக்கம்:பாடுங்குயில்.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மருளும் உலகம்

உலகம் மாறி உருள்கிறது உள்ளம் அதனுல் மருள்கிறது கலகம் காண விரைகிறது கடமை யாவும் குறைகிறது

சமயம் சாதிப் பிளவுகளால் சண்டை ஒன்றே வளர்கிறது இமயம் குமரி இடைவெளியில் எங்கும் பண்பே தளர்கிறது

மாந்தர் என்னும் உணர்வுகளை மறந்தே போனுேம் மதவெறியில் நீந்தும் வழியே தெரியவில்லை

நீளும் பகைமை மறையவில்லை

போரே எங்கும் புகைகிறது போதனை மட்டும் வளர்கிறது யாரே வருவார் அமைதிதர? எவரும் இல்லை பகை குறைய!

நாவில் மட்டும் நல்லுரைகள் நயவஞ் சகமே உள்ளுறையில் சாவில் செல்லும் உலகமிது சற்றே எண்ணின் நலம்பெறுமே

20

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாடுங்குயில்.pdf/24&oldid=593893" இலிருந்து மீள்விக்கப்பட்டது