பக்கம்:பாடுங்குயில்.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கடவுள் எழுதிய கவிதை.

>< *

கவிதை வரைந்தவன் பாடிவந்தான் - அவன் கடவுள் எனும்பெயர் சூடிவந்தான் புவியில் நிகரெனக் கில்லையென்ருன் - இது புதுமைப் படைப்பெனச் சொல்லிநின்ருன்

படிப்பறி யார்தமைக் காட்டிநின்றே - என்றன் படைப்பினுள் ஒன்றிது காண்க.என்ருன் எடுத்தறி வோடதைப் பார்த்தபின்னர் - அட எழுத்துப் பிழையிது வென்றுசொன்னேன் பொய்ம்மை வனைந்திடும் புல்லர்நின்ருர் - தமைப். புனைகவி யாமெனச் சொல்லிநின்ருன் செம்மை கெடுங்கவி செய்துவிட்டாய் - இது சீர்கெட்ட பாட்டெனச் செப்பிவிட்டேன்

வாழ்வு பெரிதென மானம்விட்டார் - தமை வாழுங் கவியெனக் காட்டிவிட்டான் தாழ்வு படக்கவி ஆக்கிவிட்டாய் - இது தளைகெட்ட பாட்டென நீக்கிவிட்டேன்

இமைப்பொழு தாகினும் இன்பமில்லார் - பெறும் இாந்துணும் வாழ்வினைப் பாடலென் ருன்

அமைப்பினைப் பாழ்படப் பாடிவிட்டாய் - ஈது அடிகெட்ட பாட்டென மூடிவிட்டேன் வறுமை யுடன் வளங் காட்டிவந்தே - அவை வளர் விதிப் பாட்டென நீட்டிவந்தான் சிறுமை படக்கவி காட்டவந்தாய் - தொடை சே i லொப் பாட்டெனப் போட்டுநொந்தேன்

21

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாடுங்குயில்.pdf/25&oldid=593894" இலிருந்து மீள்விக்கப்பட்டது