இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
தெருவிலென் னருகினில் சிறுவர்கள் ஆடித்
திரிந்திடு வார்மனம் மகிழ்ந்திருப் ப்ார்விருப்பால்
ஒருகால் உடையேன் நடவா நிலையேன்
ஒடிட முடியாக் கவலையில் நானிருப்பேன்
கலைபயில் சிறுவர் கல்வியைப் பெறஎன்
காலடி நின்றே தவமிருப் பார்தெருவில்
விலைதர முடியாக் கலையினைக் கற்றே
மேன்மைகள எய்தினர்; நூல்களிற் பேர்தெரியும்
வறியவர் உரியவர் எனும்நிலை யின்றி
வளரொளி எவர் க்கும் வழங்கிடும் முறைகொண்டேன்
சிறியவர் எறியும் கல்லடி பட்டுச் in
சிதறிட என் முகம் சீர்கெடும் நிலைகண்டேன்
பன்னருள் ஒளியால் இருளது நீங்கி
வழில்பெறும் உலகம் இனிமையில் திளைத்திருக்கும்
பன்னரும் நலங்கள் பாலித் திடுமெனப்
பழுதுறச் செய்தால் பண்பா நிலைத்திருக்கும்?
31