பக்கம்:பாடுங்குயில்.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நாட்டை வளர்த்திட வேவந்தேன் வாழ்வின்

நன்மை தளர்ந்திட வேநொந்தேன்

நாட்டை மறந்திடும் பாவந்தான்-அங்கே

நாடக மாடுவ தேகண்டேன்

கனிமலர்க் காவென நான் வந்தேன்-பண்பு

கருகிடுந் தாவென வேநொந்தேன்

தனியுரி மைக்கவி நானம்மா-துன்பம்

தரும் அடி மைத்தொழில் ஏனம்மா?

புனிதத் தொழிலென நான்கொண்டேன்-இன்று

புன்மைச் செறிவுள தேகண்டேன்

இனியித் தொழில்எனக் கேனம்மா? - கவிதை

எழுதும் பணிபுகு வேனம்மா,

த இம்

35

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாடுங்குயில்.pdf/39&oldid=593907" இலிருந்து மீள்விக்கப்பட்டது