இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
நாட்டை வளர்த்திட வேவந்தேன் வாழ்வின்
நன்மை தளர்ந்திட வேநொந்தேன்
நாட்டை மறந்திடும் பாவந்தான்-அங்கே
நாடக மாடுவ தேகண்டேன்
கனிமலர்க் காவென நான் வந்தேன்-பண்பு
கருகிடுந் தாவென வேநொந்தேன்
தனியுரி மைக்கவி நானம்மா-துன்பம்
தரும் அடி மைத்தொழில் ஏனம்மா?
புனிதத் தொழிலென நான்கொண்டேன்-இன்று
புன்மைச் செறிவுள தேகண்டேன்
இனியித் தொழில்எனக் கேனம்மா? - கவிதை
எழுதும் பணிபுகு வேனம்மா,
த இம்
35