இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
நாடொறுங் கற்றிடும் பாடலைப் பெற்றிடும்
நம்மகள் பாடிடல் கேளடியோ! வாடிடும் என் மனந் தேறிடச் செய்திடும் வல்லமை வாய்ந்திடும் யாழடியோ! கூடிடும் மாமலர்ச் சோலையி லேஒரு
கொம்பினில் தீங்குயில் கூவுதடி! பாடிடும் மென்குரல் தேனடி! அவ்விசைப்
பாடங் கொடுத்தவர் யாரடியோ?
பற்றிய ஆசையில் சிற்றில் இழைத்திடும்
பாவையுன் செல்வியைப் பாரடியோ! சுற்றிடும் நீள்மதில் முற்றிய வீடுகள்
சூழ்ந்துள காட்சியைக் காணடியோ! தொற்றிய தென்னையில் பற்றி யசைந்திடும்
துரக்கணங் கூடுகள் பாரடியோ! கற்றவர் போலவை கட்டிட அத்திறன் கற்றுக் கொடுத்தவர் யாரடியோ?