பக்கம்:பாடுங்குயில்.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

யாரடியோ? ( //・/の->多/

கொள்ளைப் பணிபொழி மார்கழித் திங்களில்

கோலமி டத்தெரு வாயிலிலே அள்ளிப் புனல்தெளித் தென் மகள் புள்ளிகள்

ஆயிரம் வைத்தனள் பாரடியோ! வெள்ளை நிலாமகட் கன்னி உலாவரும்

வீதியில் எத்தனை கோலமடி! வெள்ளி எனும்பெயர் கொண்டிடும் புள்ளிகள்

விந்தையில் வைத்தவள் யாரடியோ?

ஈகை மனத்தவ ளேஉனைப் போல் மகள்

ஏந்தி நடம்புரிந் தாளடியோ! :ஒகை மிகுத்திட ஆடல் விளைத்திடும்

ஒவியம் எத்தனை பாரடியோ! மேகம் முழங்கிடத் தாளம் இசைந்திட

மென்மயில் கூத்திடல் காணடியோ! தோகை விரித்தொரு மாமயில் ஆடிடச் சொல்லிக் கொடுத்தவர் யாரடியோ?

திெல்

42

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாடுங்குயில்.pdf/46&oldid=593914" இலிருந்து மீள்விக்கப்பட்டது