பக்கம்:பாடுங்குயில்.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

என்றும் உனதே நெஞ்சம்-அதுவே

எழிலார் மலர் சேர் மஞ்சம்

ஒன்றிய ஆசையிற் கெஞ்சும்-எனைநீ

ஒதுக்கிடின் உயிரே அஞ்சும்

உனை நான் என்றும் பிரியேன்-பிரியின்

உயிர்தான் பெரிதோ தரியேன்

புனை பா உணர்வாற் பொழிவேன்-கண்டு

பூமியும் நம்மைத் தொழுமே

வானிற் பறந்தே செல்வோம்-நம்பால் வருமிடர் அனைத்தும் வெல்வோம்

தேனில வுக்கதை சொல்வேன்-அங்கே

தெள்ளிய பாநலம் கொள்வோம்

கண்ணுள் ஒளியாய் ஒன்றி-நீ.என்

காலம் முழுதும் நின் ருல்

மண்ணும் விண்னும் ஒன்றே-என்றும்

மருவிக் களிப்போம் நன்றே

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாடுங்குயில்.pdf/45&oldid=593913" இலிருந்து மீள்விக்கப்பட்டது