இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
என்றும் உனதே நெஞ்சம்-அதுவே
எழிலார் மலர் சேர் மஞ்சம்
ஒன்றிய ஆசையிற் கெஞ்சும்-எனைநீ
ஒதுக்கிடின் உயிரே அஞ்சும்
உனை நான் என்றும் பிரியேன்-பிரியின்
உயிர்தான் பெரிதோ தரியேன்
புனை பா உணர்வாற் பொழிவேன்-கண்டு
பூமியும் நம்மைத் தொழுமே
வானிற் பறந்தே செல்வோம்-நம்பால் வருமிடர் அனைத்தும் வெல்வோம்
தேனில வுக்கதை சொல்வேன்-அங்கே
தெள்ளிய பாநலம் கொள்வோம்
கண்ணுள் ஒளியாய் ஒன்றி-நீ.என்
காலம் முழுதும் நின் ருல்
மண்ணும் விண்னும் ஒன்றே-என்றும்
மருவிக் களிப்போம் நன்றே