இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
என்றும் ಕ್ಲಿಲ್ಡಣT6ಣಿ
(労・soいァ多
o
என்றும் நானேர் இளைஞன்-பாடல்
எழுதிக் கொழிக்குங் கவிஞன்
ஒன்றும் வாழ்விற் சுவைஞன்-நெஞ்சில் உணர்ச்சித் துடிப்போ மிகைஞன்
செந்தமிழமுதம் உண்டேன்-முதுமை
சிறிதள வேனும் அண்டேன்
சிந்தையில் இளமை கொண்டேன்-உலகம்
சிறிதாய்த் தோன்றிடக் கண்டேன்
கற்பனைப் பெண்ணே வருவாய்-நின்றன்
கைகளை என்பால் தருவாய்
பொற்கலன் ஆயிரந் தருவேன்-அவையே
புதுமைக் காவிய உருவாம்
ஊரார் ஏதோ மொழிவார்-அதுதான்
உளறும் வாயர் தொழிலாம்
பாராய் என நீ விழியால்-என்னைப்
பழகிய பின்நீ குழைவாய்