இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
உலகின் நிலையே தெரியவிலை-அங்கே உண்மையும் பொய்யும் புரியவிலை
அலகில் விளையாட் டாடிடுவேன்-என்னே
டாரும் வரவிலை கூடிடவே
உள்ளஞ் சுடுசொல் பொறுப்பதிலை-சொன்னல்
உடனே அழுவேன் வெறுப்பதிலை
கள்ளங் கவடந் தரிப்பதிலை-நீயேன் கனிவாய் மலர்ந்தே சிரிப்பதிலை?
அழுக்கா (ாசை வெகுளியெனும்-நெஞ்சின்
அழுக்குகள் யாவுங் கழுவினை நீ
இழுக்கா மானம் அருளறிவு-அணிகள்
எத்தனை எத்தனை அருளினை நீ!
நின்னருள் மாமழை பொழிந்திடுவாய்-நானும்
நீங்கா ததனுள் நனைந்திடுவேன்
என்னுயிர் நீதான் தமிழம்மா-என்னை எடுத்தொரு முத்தம் அருளம்மா.
39