பக்கம்:பாடுங்குயில்.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உலகின் நிலையே தெரியவிலை-அங்கே உண்மையும் பொய்யும் புரியவிலை

அலகில் விளையாட் டாடிடுவேன்-என்னே

டாரும் வரவிலை கூடிடவே

உள்ளஞ் சுடுசொல் பொறுப்பதிலை-சொன்னல்

உடனே அழுவேன் வெறுப்பதிலை

கள்ளங் கவடந் தரிப்பதிலை-நீயேன் கனிவாய் மலர்ந்தே சிரிப்பதிலை?

அழுக்கா (ாசை வெகுளியெனும்-நெஞ்சின்

அழுக்குகள் யாவுங் கழுவினை நீ

இழுக்கா மானம் அருளறிவு-அணிகள்

எத்தனை எத்தனை அருளினை நீ!

நின்னருள் மாமழை பொழிந்திடுவாய்-நானும்

நீங்கா ததனுள் நனைந்திடுவேன்

என்னுயிர் நீதான் தமிழம்மா-என்னை எடுத்தொரு முத்தம் அருளம்மா.

39

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாடுங்குயில்.pdf/43&oldid=593911" இலிருந்து மீள்விக்கப்பட்டது