பக்கம்:பாடுங்குயில்.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆட்சியில் ஏறி அறநெறி காப்போர்

ஆசையில் தவறுகள் இழைத்தா லென்ன

மாட்சிமை அறியா வஞ்சகர் கூடி ---

மற்றவர் பொருளைப் பறித்தா லென்ன

குற்றங் குற்றந்தான்-ஒரு சட்டஞ் சட்டந்தான்

கற்றவர் என்போர் கயமைகள் யாவும் கலை எனும் பேரால் செய்தா லென்ன மற்றவர் இங்கே மடமைகள் யாவும்

வயிறெனும் பேரால் செய்தா லென்ன

குற்றங் குற்றந்தான் - ஒரு

சட்டஞ் சட்டந்தான் .

வெள்ளியி லான விளக்கது கொண்டு

வேய்ந்திடுங் கூரையில வைத்தா லென்ன

கொள்ளிக ளான விறகினைக் கொண்டு

குடிசையில் நெருப்பினை வைத்தா லென்ன

குற்றங் குற்றந்தான்-ஒரு

சட்டஞ் சட்டந்தான்

கன்னியர் தவறின் கண்டனம் வேறு

காளைய பிறழ்ந்தால அதன் பெயர் வேரு?

இந்நிலை கண்டார் அறமென ஒதார்

இழிசெயல் ஒன்றினை யார்செய் தாலும்

குற்றங் குற்றத்தான்-ஒரு

சட்டஞ் சட்டந்தி ன்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாடுங்குயில்.pdf/49&oldid=593917" இலிருந்து மீள்விக்கப்பட்டது