இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
ஆட்சியில் ஏறி அறநெறி காப்போர்
ஆசையில் தவறுகள் இழைத்தா லென்ன
மாட்சிமை அறியா வஞ்சகர் கூடி ---
மற்றவர் பொருளைப் பறித்தா லென்ன
குற்றங் குற்றந்தான்-ஒரு சட்டஞ் சட்டந்தான்
கற்றவர் என்போர் கயமைகள் யாவும் கலை எனும் பேரால் செய்தா லென்ன மற்றவர் இங்கே மடமைகள் யாவும்
வயிறெனும் பேரால் செய்தா லென்ன
குற்றங் குற்றந்தான் - ஒரு
சட்டஞ் சட்டந்தான் .
வெள்ளியி லான விளக்கது கொண்டு
வேய்ந்திடுங் கூரையில வைத்தா லென்ன
கொள்ளிக ளான விறகினைக் கொண்டு
குடிசையில் நெருப்பினை வைத்தா லென்ன
குற்றங் குற்றந்தான்-ஒரு
சட்டஞ் சட்டந்தான்
கன்னியர் தவறின் கண்டனம் வேறு
காளைய பிறழ்ந்தால அதன் பெயர் வேரு?
இந்நிலை கண்டார் அறமென ஒதார்
இழிசெயல் ஒன்றினை யார்செய் தாலும்
குற்றங் குற்றத்தான்-ஒரு
சட்டஞ் சட்டந்தி ன்