பக்கம்:பாடுங்குயில்.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கற்பனை மன்னவன்

/ : 7~ の-アダ 入

கவியெனப் போற்றிடும் பேர் படைத்தான்-நெஞ்சில்

கற்பனை யாலொரு பார்படைத்தான் -

புவியதை ஆண்டிடக் கோலெடுத்தான்-அங்கே

புதுமைகள் பற்பல தான்கொடுத்தான்

வறுமைப் பகையொடு போர் தொடுத்தான்-மக்கள்

வளமுடன் வாழ்ந்திடச் சீர்கொடுத்தான்

சிறுமைக் குறைகளை வேரெடுத்தான்-ஆண்மைச்

சிங்கமென் ருேங்கிடும் பேரெடுத்தான்

நலமிகும் ஆட்சியொன் றேவிரித்தான்-யாவும்

நாட்டவர்க் கேபொது வென்றுரைத்தான்

குலமகன் மன்னவன் போற்சிரித்தான்-என்றும்

கோட்டைகள் கட்டிட வேகுறித்தான்

கற்பனை நாட்டையே மேல்நினைந்தான். மண்ணில்

கட்டிய வீட்டினைத் தான்மறந்தான்

முற்பட மாந்தரை யே நினைந்தான்-கொண்ட மொய்குழல் மாதினைத் தான்மறந்தான்

46

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாடுங்குயில்.pdf/50&oldid=593918" இலிருந்து மீள்விக்கப்பட்டது