இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
மலர் தந்த பாடம்
ダー"zー乙%。
亲
அரும்பிச் சிரிக்குஞ் சிறுமலரே-நெஞ்சை
அள்ளிக் கவரும் எழிலுருவே
விரும்பிக் கிடக்கும் எனதுளமே-நின்பால்
வீசும் மணமும் நுகர்வுறவே
இதழை விரித்தே நகைபுரிவாய்-வண்டோ | ஏழிசை பாடச் சுவைதருவாய்
புதுமைப் பொலிவால் நலந்தருவாய்-மாதர்
போற்றிப் புகழும் நிலைபெறுவாய்
விரியும் இதழில் சிறுபணிகள்-காலை வீழும் பொழுதில் பெறுமழகு பரிதிக் கதிரால் மெருகுபெற-நின்னைப்
பார்த்துக் களிப்பேன் இருவிழியால்
உருவாய் வருங்கால் அரும்பென்பார்-நின்றன்
உடலோ பருத்தால் போதென்பார் சிறிதே விரிந்தால் மலரென்பார்-கீழே
சிதறி விழுந்தால் வீ என்பார்
4.
வி- வாடி விழும் மலர்.