பக்கம்:பாடுங்குயில்.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உலகில் பிறந்தாய் மனந்தந்தாய்-மாதர்

உள்ளம் மகிழத் துணைநின்ருய்

இலகும் எழிலைப் பிரிகின்ருய் வாடி எங்கோ தரையில் உதிர்கின்ருய்

இருக்கும் பொழுதில் பிறர் மகிழ-உன் ல்ை

இயலும் வகையால் உதவிடுக’

குறிப்பு மொழியால் அறிவுரையை-என்பால்

கூறி முடித்தாய் நினதுயிரை

அழகும் மனமும் நிலையலவே-பாரில்

ஆடி யடங்கும் முறையுளதே =

குழையும் மனத்தில் அருள்பெறுவேன்-மக்கள்

குலமே உயர உதவிடுவேன்

குளிரும் மலரே ஒருமொழியை-உன் பால்

கூற நினே த்தேன் செவிவழியே

தளரும் நிலைதான் வருபொழுதும்-மாந்தர்

தமக்கே கொடுப்பேன் எனதுயிரை.

苓苓

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாடுங்குயில்.pdf/63&oldid=593932" இலிருந்து மீள்விக்கப்பட்டது