பக்கம்:பாடுங் குயில்கள்.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

28 பாடுங் குயில்கள் எந்தப் புதுமைக்கும் முதலில் எதிர்ப்பு ஏற்படுவது இயல்பே. இவருடைய தமிழிசை மறு மலர்ச்சிக்கும் எதிர்ப்புத் தோன்றியது ; இகழ்ந்து. கூறியவரும் உண்டு : எள்ளி நகையாடியவரும் உண்டு ; வெறுப்புக் காட்டியவர்களுக்கும் குறை வில்லை. ஆயினும் வேதநாயகர் இவற்றிற்கு அஞ்சி ஞர் அல்லர்; மேலும்மேலும் புதிய பாடல்களை எழுதி அரங்கேற்றினர். விடாது முயன்றமையால், தமிழிசைப்பாட்டுகள் எங்கும் பரவத் தொடங்கின. இசைவாணர் மேடைதோறும் தமிழிசைப் பாடல்களை முழங்கினர். வானொலி நிலையங்களில் இன்று நாடோறும் நாம் தமிழிசை கேட்டு மகிழ் கின்ருேம். ஆயினும், இவருடைய பாடல்களை இன்னும் விரிவாகப் பரப்ப முயலுதல் வேண்டும். இசைவாணர் அவற்றை மறந்து விட்டனரோ என்னும் ஐயம் நமக்கு உண்டாகின்றது. வேத நாயகர் இயற்றிய இசைப்பாடல்களை நன்முறை யில் அச்சிட்டுப் பரப்பவேண்டும். வளர்ந்துவரும் இளைஞர் சமுதாயத்துக்கு வேதநாயகரை நன்கு அறிமுகஞ்செய்யவேண்டும். இவரை அறிமுகஞ் செய்துவைத்தால் இளைஞருடைய உள்ளங்களிலே நல்ல கருத்துகள் பல பதியும். அதனுல் அவர்கள் நல்ல குடிமக்களாக வளர்ந்து வருவார்கள். நற்குடி மக்களாக வளர்ந்த அவர்களால் நாடு நலம் பெறும். சர்வ சமயக் கீர்த்தனைகள் இவருடைய பாடல்கள் இலக்கண வரம்பு கடவாதன. இவற்றில் சொல்லழகு மிளிரும் ;