பக்கம்:பாடுங் குயில்கள்.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2. மணிக்குயில் தேசிகவிநாயகம் (கி. பி. 1876 - 1954) ஒரு நாடு நல்ல நாடு என்று சொல்லவேண்டு மானல், அந் நாட்டு மக்கள் நல்லவர்களாக விளங்க வேண்டும். மலை வளம், ஆற்று வளம் முதலிய வளங்களைக்கொண்டோ, விளைநிலம், சோலைநிலம் இவற்றின் செழிப்பைக்கொண்டோ மட்டும் ஒரு நாடு சிறப்புப் பெறுவதில்லை. மனவளங்கொண்ட மக்களைக்கொண்டுதான் அந்த நாடு, புகழுக்குரிய நாடென்று போற்றப்படும். மக்கள் பண்பாடு மிக்கவர்களாக வாழவேண்டுமானல், இளமைப் பருவத்திலேயே அவர்களைப் பண்படுத்தி வர வேண்டும். இளஞ்சிருர்களைப் போற்றி வளர்க்க மறந்த எந்த நாடும் ஏ ற் ற ம் பெறுவதில்லை. இவ் வுண்மையை நன்குணர்ந்து, இளஞ்சிருர் நெஞ்சங் களைப் பண்படுத்தி, மக்கட் பண்பை வளர்க்க வேண்டும் என்னும் கொள்கைக்காகவே வாழ்ந்தவர் மிகச் சிலரே. இத்தகைய சான்ருேர்களுள் ஒருவர் கவிமணி தேசிகவிநாயகம் பிள்ளை. கவிஞர்கள் தங்கள் நூல்களைப் புகழ்பெற்ற பெரியவர்களுக்கே காணிக்கையாக்குவது வழக்கம். ஆனால், கவிமணி தேசிகவிநாயகம் பிள்ளை தம் கவிதைத் தொகுப் பாகிய மலரும் மாலேயும் என்னும் நூலைச்