பக்கம்:பாடுங் குயில்கள்.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

48 பாடுங் குயில்கள் தார். எவ்வுயிர்க்கும் துன்பம் இழைத்தல் கூடாது என்னும் அருள் நெஞ்சம் அப்பொழுதே இவரிடம் அரும்பத் தொடங்கிவிட்டது. படிக்கும் பழக்கம் "படிக்கும் பழக்கத்தை மனிதன் ஒரளவோடு நிறுத்திவிடுகின்ருனே! இறக்கும் வரை கற்காமல் இருக்கின்ருனே!’ என்று வள்ளுவர் வருந்தியுரைக் கின்ருர். கவிமணி அதனை நன்குணர்ந்தமையால் எ ப் பொழுது ம் படித்துக்கொண்டேயிருந்தார். இறுதிக் காலத்தில் நோய்வாய்ப்பட்டுப் படுக்கையில் கிடந்தபோதும், இவர் படிப்பதை நிறுத்தியதில்லை. ஊக்குவிக்கும் பண்பு வளர்ந்துவிட்ட எழுத்தாளர்கள், வளர்ந்து வரும் இளம் எழுத்தாளர்களைப் பாராட்டுவதைக் காண்பது அரிது. ஆனல், கவிமணியோ இளம் எழுத்தாளர்களைப் பாராட்டி, ஊக்கமூட்டுவது வழக்கம். கவிதை எழுதுபவர்களோ கட்டுரை எழுதுபவர்களோ, கதை எழுதுபவர்களோ தம் மிடம் வந்தால், குறைகளை எடுத்துக்காட்டி அவர் களுடைய ஊக்கத்தைக் குன்றச்செய்யமாட்டார். அவர்கள் எழுதியவற்றுள் நல்லன போற்றி, * இப்படித்தான் எழுதவேண்டும் ; அது நன்ருய் இருக்கிறது ; இது நன்ருய் இருக்கிறது : இன்னும் நன்ருய் எழுத வேண்டும் என்று சொல்லி, மேலும் மேலும் எழுதத் துண்டுவார். இவ்வாறு பிறரை யும் வளர்த்துவிட எண்ணும் இயல்பு இவரிடம் மிக்கிருந்தது.