இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
பூத்தது பூத்தது தாமரையே
புன்னகை பூத்தது தாமரையே
செங்கதிர் மன்னனைக் கண்டவுடன்
சிரித்தது பூத்தது தாமரையே!
பனியை விரட்டிய பகலவனைப்
பார்த்துச் சிரித்தது தாமரையே
இனிமை பரப்பிய கதிரொளியை
ஏற்றுச் சிரித்தது தாமரையே!
வையம் முழுவதும் வரவேற்று
வாழ்த்துச் செய்தியைத் தெரிவிக்க
மெய்யாய் இதழ்கள் அத்தனையும்
விரித்தது சிரித்தது தாமரையே!